மரத்தின் மேல்
ஒரு பட்டாம்பூச்சி எழும்பி,
தவிட்டுக் குருவி
செம்பருத்தியில் சினுங்கி,
பலா மரத்தில்
அணில் ஓடி,
எப்பொழுதும் போல்
முகம் தெரியாத குருவி கத்தி,
காக்கை கரைந்து,
வானத்தில்
இரு பறவைகள் எங்கோ செல்ல..
இக்கணத்தில்...
நான் என்னில் இருக்கிறேன்!
- பிரகாஷ் சம்பந்தம்
Prev NextGo Back
அழகான, ஆழமான கவிதை.
வளரட்டும் உங்கள் கவித்துவம்.
Iniya thigattatha kavithai
அருமை!!