நடந்தவையும் நடக்க வேண்டியவையும்
தன்னை பங்கிட்டுக் கொள்ளும்
கண் எதிரே உள்ள பெண்மணியின்
கண் குறித்து கவிதை எழும்
பலமுறை கேட்ட பாடலின்
அர்த்தம் அம்முறை புரியும்
அடுத்த இருக்கையில் இருப்பவரின்
அட்டுழியத்தால் எரிச்சல் எழும்
ஆயிர கணக்கில் வைத்திருந்தும் ஐந்து ரூபாய்க்கு
அலைகிறான் என்ற எண்ணங்கள் எழும்
இவை போன்று பயணம் குறித்து
பல சிந்தனைகளும் வரும்
- பிரவீன்
Prev NextGo Back