சிறகுகள் கொள்ள ஆசை
சிறை கொண்டு விட்டேன்...
சிறகுகளை இரசிக்கிறேன்
சன்னலின் வழியே...
தடைகளை உடைக்காமல்
தவிக்கிறேன்...
தலை உயர
துடிக்கிறேன்...
தவறென்று உணராமல்...
நான் போட்ட
வட்டம்
நீளாமல் நெறிக்கிறது
என்னை...
உடைத்தெரிய
உடைவாள் தேடியும்
உள்ளுக்குள் எரிகிறேன்...
என்
உதிரங்கள் சுண்டிடுமோ?
வட்டம் மீளாமல்....
- கா. சரவணன்
Prev NextGo Back
அருமை