நாட்கள் நகர்தலின் நாழிகை

உன்னுடன்
பேசாமல் நாழிகை
போகவில்லை என்றது !
உன்னுடன்
பேசியே நாழிகை
போகிறது என்றானது !
வித்தியாசத்தில்...
ஒளிந்திருக்கிறது...
காதல்!சாதல்!....புரிதல்!!!

       - தன்யா செந

முதல் வாக்கு

நான் கற்ற முதல் எழுத்து
அமுது மொழியின் அ

நான் கொண்ட முதல் காதல்
கயல்விழியும் தோற்கும்
என் கண்மணியின் கருவிழி

நான் வாங்கிய முதல் சம்பளம்
விரும்பிய வேலைக்கே

இவை யாவும் அழகாய்...Read More

       - பிரவீன்

அழுகைக் குரல்

ஆள் நடமாட்டம் அதிகம் அல்லாத
அய்யனார் கோயிலில் ஆண்டுமுழுவதும்
அவளின் அழுகை சத்தம்

ஆடிக்கு ஒரு ஆடு
அம்மாவாசைக்கு ஒரு ஆடு
அவளின் அழுகையை தீர்க்குமா?

ஆயினும் அவள் அழுகை
தீரும் என...Read More

       - பிரவீன்

மழலை பருவம்

நாத்திகம் பேசும் நல்லவனும்
நாள் முழுவதும் மகிழும்
மழலை கண்டு
கடவுளே அப்பருவத்திற்கு
அழைத்துச் செல் என்கிறான்

       - பிரவீன்

வாழ்க்கை

நகலெடுக்கும் பெண்ணின்

மருதாணியிட்ட
இடது கை விரல்களுக்கும்...

கருத்த‌
வலது கை விரல்களுக்கும்...

இடையே
பாவித்து வாழ்கிறது வாழ்க்கை!!!

       - பிரகாஷ் சம்பந்தம்

பயணம்

நடந்தவையும் நடக்க வேண்டியவையும்
தன்னை பங்கிட்டுக் கொள்ளும்

கண் எதிரே உள்ள பெண்மணியின்
கண் குறித்து கவிதை எழும்

பலமுறை கேட்ட பாடலின்
அர்த்தம் அம்முறை புரியும்

அடுத்த...Read More

       - பிரவீன்

தனிமை

தனிமையில் தோன்றிய தவறு,

அனைத்தையும் அழித்து
அளித்தது தனிமை

       - பிரவீன்

சாமானியனும் செல்வந்தனும்

நாள்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் செல்வந்தன்
மாதந்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் சாமானியன்

       - பிரவீன்

ஒருதலை காதல்

இன்பம் இல்லாமல் மகிழ்வதும்
துன்பம் இல்லாமல் அழுவதுமே!

       - பிரவீன்

மழலை

இன்றும் மழலை தெரிகிறது அவள் முகத்தில்..
அன்று புகைப்படம் எடுத்து வைத்த அவள் தந்தைக்கு அது தெரியாமல் போனது...

       - பிரவீன்

< Prev  1  2  3  4  5  6  7  8  9  Next