சமீபத்திய நாட்களில் பாடகர் பிரதீப் குமார் பற்றி நிறைய கேட்க நேரிட, அவர் பாடிய பாடல்களை கேட்கவும் நேரிட்டது.
அப்படியாக கேட்கும் பொழுது அவருடைய நேர்காணல் ஒன்றை பார்த்தேன். சில சுவாரஸ்யமான தகவல்களுக்கு இடையில் என் வாத்தியார் யோசிப்பதற்கு சோம்பேறித்தனம் கூடாது என்பார் என்று கூறினார்.
இதை கேட்டதும் சற்று புதுமையாக இருந்தது. சிறிது யோசித்து பார்த்த பிறகு அட ஆமா நம்மலும் சோம்பேறித்தனத்தின் காரணமாக "என்னமோ!" என்று பலவற்றை கடந்த சென்றிருக்கிறோம் என தோன்றியது.
நம்மை அறியாமல் பல தவறுகளை செய்வோம். அதில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன்.
- பிரவீன்
Prev NextGo Back