- கா சரவணன்
காக்கையை ஓட்ட
சோளக்கொல்லை பொம்மை
கோட்-சூட்டோடு
பொம்மையை செய்தவன்
கோமணத்தோடு
அப்பா
எப்போ வருமென்று
அம்மாவிடமும்..
அம்மா
எப்போ வருமென்று
அப்பாவிடமும்
கேட்டு அடம் பிடிக்கும்
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது!
- கா சரவணன்
கால் சட்டை
இடுப்புல நிக்கல...
நீயெல்லாம்
காசு பார்க்கனும்னு
களையெடுக்க வந்துட்ட
போடா
பள்ளிக் கூடத்துக்கு!
- கா சரவணன்
பொய் சொல்லியதுண்டா?
உண்டு...
எப்போ?
தேவைப்படும் போது
ஒரு பொய் சொல்லேன்?
நீயொன்றும் அழகில்லை....
ச்சீசீ போடா
உன் வெட்கமும் அழகில்லை...
- கா சரவணன்
போட்ட முடிச்சுகளை
அறுப்பதை விட
அவிழ்ப்பது சுகம்
பொருமையோடும்
பெருமையோடும்
- கா சரவணன்
உணர்வில்லாத
காகித கடிதத்தில்
உனர்வோடு
உன் உதட்டுச்சாயத்தாள்
நீ வரைந்த
ஓவியம்
------------------------------------
இதழ் மீது
இதழ் வைத்து
தேனெடுக்கும்
வண்டுக்கு தெரிந்த தொழில்
- கா சரவணன்
உண்மையில்
நான் பேச வந்தது
சமாதானம்...
பேசி முடிக்கையில்
முரன்பாடாயிற்று...
- கா சரவணன்
ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ
- கா சரவணன்
குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்
குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை
நானும் அதன்
வழியில்
செல்லவில்லை
பயணம்...Read More
- கா சரவணன்
மரணப் படுக்கையிலிருந்த
தாத்தாவிற்கு
நிறைவேறாத ஆசையிருப்பதாக
வாழ்ந்த மண்ணையும்
அணிந்த பொன்னையும்
இழைத்து ஊட்டினார்கள்
அப்பொழுதும்...Read More
- கா சரவணன்