- வெங்கடேசன்
பெண்ணின் காதல்...
காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்
இவ்வளவுதானா? உன் காதல்.
இப்படிக்கு
பூக்கள்.
முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்....
- வெங்கடேசன்
முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்.....
- வெங்கடேசன்
கட்டாய கல்யாணம் தவறாம்,
உன் அழகு
என்னை கட்டாயமாக
காதலிக்க சொல்வது
மட்டும் நியாயமோ..?
- வெங்கடேசன்
நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!
வேண்டாம் பெண்ணே..
மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது
- வெங்கடேசன்
உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள் --
வேண்டாம் என்று ...
உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....
- வெங்கடேசன்