அமிர்தத்தை பருகி இருந்தாலும்..
ஆனந்தம் அடைந்து இருப்பேனோ...
இன்முகத்தோடு வரவேற்றேனே..!
ஈரம் செய்தானே..!
உள்ளம் நிறைத்தானே..!
'ஊ 'என்ற ஒலியை
எச்சிலாய் வெளியேற்ற
ஏகாந்தமாய் படுத்து இருக்கிறான்
ஐயமில்லா நடுக்கத்தோடு..
ஒய்யார அழகோடு..
ஓங்கி அழுதானே..!
ஒளவியப்படும் ஆணழகு !!!
அஃறிணையும் அறியுமே..
அவன் பெயரை !!!
அழைக்க காத்திருக்கிறேன்
'சித்தி' என்று
என் மகன்...!!!
- தன்யா செந
Prev NextGo Back
'ஐ' யை விட்டு விட்டீர்களே....
நன்றி
நன்றி தோழி