- பிரவீன்
சொட்டு சொட்டாக உப்பு நீர்
அவனுக்குள் செலுத்தப்பட்டது
கடைசிச் சொட்டு அவன்
பொறுமையை சோதிப்பதை
நிறுத்திக் கொண்டது
விளக்கின்
வெளிச்சத்தில்
மெதுவாக
ஊர்ந்து வந்தது
எரும்பு
புத்தகம் படிக்க
- கா.சரவணன்
நாத்திகம் பேசும் நல்லவனும்
நாள் முழுவதும் மகிழும்
மழலை கண்டு
கடவுளே அப்பருவத்திற்கு
அழைத்துச் செல் என்கிறான்
- பிரவீன்
தனிமையில் தோன்றிய தவறு,
அனைத்தையும் அழித்து
அளித்தது தனிமை
- பிரவீன்
இன்பம் இல்லாமல் மகிழ்வதும்
துன்பம் இல்லாமல் அழுவதுமே!
- பிரவீன்
இன்றும் மழலை தெரிகிறது அவள் முகத்தில்..
அன்று புகைப்படம் எடுத்து வைத்த அவள் தந்தைக்கு அது தெரியாமல் போனது...
- பிரவீன்
அழையாத...
அழைப்பிதழ்...
முகநூலில் பார்த்தேன்...
மகிழ்ச்சி...
- கா.சரவணன்
என் மழலையின்
கண்டுபிடிப்பு...
அப்பா...
"அ" இங்கிருக்கு...
- சீரமுதன்