அறுபது பேர் பயணிக்கும் பேருந்து
இருபது பயணிகளுடன் மட்டும் பயணத்தை தொடங்கியது
பேருந்து நகரத்தை கடக்க நடத்துநர் பயணச்சீட்டு கணக்கீட்டை முடித்தார்
அங்கும் இங்குமாக அமர்ந்தவர்கள் அவரவர் வேலையை பார்க்க
நான் ஜன்னலை சற்று நீக்கி
இரவு நேரக் காற்றை அனுபவித்தேன்
என்னருகில் அமர்ந்த மூதாட்டி
தன் பையில் இருந்த மல்லிகை பூக்களை தன் அருகில் இருந்த இருக்கையில் பரவ விட்டு கட்ட தொடங்கினாள்
ஒவ்வொரு பூவும் அதில் இருந்து தப்பிக்க காற்றில் தன் முகத்தை திருப்பிக் கொண்டே இருந்தன
பேருந்து குலுங்கும் போது வெளியே குதிக்க முயன்றன
ஆயினும் பாட்டியிடம் பூக்கள் சிக்கிய வண்ணம் இருந்தன
இறுதியாக காற்றில் தன் வாசனையை பரப்பி பேருந்தில் இருந்தவர்களிடம் உதவியை நாடியது
வாசனை ஓட்டுநரை எட்ட பேருந்தின் உள்ளிருந்த மின்விளக்குகளை அணைத்தார்
மீதம் இருந்த பூக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு பைக்குகள் சென்றன
- பிரவீன்
Prev NextGo Back
கவிதை மிக அருமை