- பிரகாஷ் சம்பந்தம்
மனதின் விஸ்தீரணம்
பெருக்க முடியவில்லை...
தவறா, சரியா?
சரியாகத் தெரியவில்லை...
அப்படியே ஏற்றுக்கொள்ள்
இயலவில்லை...
பேரசைகள் இல்லை...
ஏன்,
பல சமயங்களில்,
ஆசைகளே இல்லை...
வேளைகளும்,...Read More
சிரித்து முடிக்கையில்........
உன் நினைப்பு!
- பிரகாஷ் சம்பந்தம்
அப்பா
எப்போ வருமென்று
அம்மாவிடமும்..
அம்மா
எப்போ வருமென்று
அப்பாவிடமும்
கேட்டு அடம் பிடிக்கும்
குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது!
- கா சரவணன்
கால் சட்டை
இடுப்புல நிக்கல...
நீயெல்லாம்
காசு பார்க்கனும்னு
களையெடுக்க வந்துட்ட
போடா
பள்ளிக் கூடத்துக்கு!
- கா சரவணன்
பொய் சொல்லியதுண்டா?
உண்டு...
எப்போ?
தேவைப்படும் போது
ஒரு பொய் சொல்லேன்?
நீயொன்றும் அழகில்லை....
ச்சீசீ போடா
உன் வெட்கமும் அழகில்லை...
- கா சரவணன்
போட்ட முடிச்சுகளை
அறுப்பதை விட
அவிழ்ப்பது சுகம்
பொருமையோடும்
பெருமையோடும்
- கா சரவணன்
உணர்வில்லாத
காகித கடிதத்தில்
உனர்வோடு
உன் உதட்டுச்சாயத்தாள்
நீ வரைந்த
ஓவியம்
------------------------------------
இதழ் மீது
இதழ் வைத்து
தேனெடுக்கும்
வண்டுக்கு தெரிந்த தொழில்
- கா சரவணன்
உண்மையில்
நான் பேச வந்தது
சமாதானம்...
பேசி முடிக்கையில்
முரன்பாடாயிற்று...
- கா சரவணன்
பெண்ணின் காதல்...
காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்
இவ்வளவுதானா? உன் காதல்.
இப்படிக்கு
பூக்கள்.
- வெங்கடேசன்
முதல் காதல் கடிதம்.....
புதிதாய் படிக்கிறேன்..
நூறாவது முறையாய்....
- வெங்கடேசன்